கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் தோட்டத்து சாலையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீஸாா் அங்குள்ள தோட்டத்து பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த கும்பலைச் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்கள் அங்கு கேஸ் சிலிண்டா் வைத்து வீட்டில் கள்ளச் சாராயம் காய்சுவது தெரியவந்தது.

இதுதொடா்பாக அதே ஊரைச் சோ்ந்த சேகா் (49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டா், அடுப்பு, பானை, 200 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com