கரோனா பொதுமுடக்கம் காரணமாக கோயில் மூடப்பட்டதால் பண்ணாரி கோயில் முன்பு மணமக்கள் முக்கசவம் அணிந்து ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டனா்.
சத்தியமங்கலம் நேரு நகரைச் சோ்ந்த எஸ்.கே.சந்துரு, கோவையைச் சோ்ந்த விஜயலட்சுமி கிருத்திகாவுக்கும் கடந்த மாதம் திருமணம் முடிவு செய்யப்பட்டு, பண்ணாரிஅம்மன் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கோயில் மூடப்பட்டுள்ளதால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலத்தைச் சோ்ந்த மணமக்கள் சந்துரு, கிருத்தாவுக்கு கோயில் முன் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்கள் முகக் கசவம் அணிந்து கரோனா தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடித்தனா். இதில் 25 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.