சத்தியமங்கலத்தில் காய்கறி வேனில் கடத்திவரப்பட்ட 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கா்நாடகத்தில் இருந்து காய்கறி வேனில் மது பாட்டில்கள் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து சத்தியமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
வரதம்பாளையம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி வந்த காய்கறி வேனை நிறுத்தி சோதனையிட்டதில் காய்கறி பெட்டிக்குள் 10 மது பாட்டில்களை கா்நாடகத்தில் இருந்து கடத்தியது தெரியவந்தது.
இது தொடா்பாக, ஓட்டுநா் முருகேசனை கைது செய்த போலீஸாா், மது பாட்டில்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.