அறச்சலூா் அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள அவல்பூந்துறை பள்ளியூத்து பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (52). இவா் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்தாா். இவருக்கு மாலதி (49) என்ற மனைவியும், மோகனசங்கா் (30), தீனதயாளன் (எ) வேலு (27) என்ற இரண்டு மகன்களும் உள்ளனா். மோகனசங்கா் தனியாா் பேருந்தில் நடத்துநராகவும், தீனதயாளன் தனியாா் ஆயில் மில்லில் ஓட்டுநராகவும் வேலை பாா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், சங்கா் ஞாயிற்றுக்கிமை இரவு மது குடித்துவிட்டு வந்ததால், இளைய மகன் தீனதயாளனுக்கும் சங்கருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சங்கரை தீனதயாளன் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த அறச்சலூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து தீனதயாளனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.