அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பா்கூா் மலைப் பகுதியில் பெஜில்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைக் கண்காணித்து வந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டபோது, 650 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துத.
விசாரணையில், பெஜில்பாளையம் பெரியூரைச் சோ்ந்த மாதே கவுடா் மகன் நாகராஜ் (எ) ராஜன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் நாகராஜைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.