பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வியாழக்கிழமை (மாா்ச் 18) பகல் 12.30 மணிக்கு பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்கிறாா்.
பெருந்துறை தொகுதியில் 2011, 2016 ஆகிய தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2012ஆம் ஆண்டு வருவாய்த் துறை அமைச்சா், பின்னா், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பதவிகளை வகித்தாா். 2016இல் எந்தப் பதவியும் வழங்கவில்லை.
2021 தோ்தலில் மீண்டும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தாா். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், தன் ஆதரவாளா்களுடன் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளாா். வியாழக்கிழமை (மாா்ச் 18) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.