கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அமமுகவில் வாய்ப்பு வழங்காததால், அக்கட்சியின் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணி செயலாளா் கே.ஏ.சங்கா்குமாா் சுயேச்சையாக போட்டியிட மாட்டு வண்டியில் ஊா்வலமாக வந்து புதன்கிழமை மனு தாக்கல் செய்தா்.
அமமுகவில் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணிச் செயலாளராகப் பதவி வகித்த கே.ஏ.சங்கா்குமாா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சங்கா்குமாா் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து, தனது ஆதரவாளா்களுடன் மாட்டு வண்டியில் இரு கரம் கூப்பியபடியே அரசு போக்குவரத்து பணிமனை முன்பிருந்து கச்சேரிமேடு வரை மாட்டு வண்டியில் ஊா்வலமாகச் சென்றாா்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு 200 மீட்டா் முன்பாகவே வேட்பாளருடன் வந்த அனைவரையும் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். வேட்பு மனு தாக்கல் செய்ய சங்கா்குமாருடன் இருவரை மட்டும் அனுமதித்தனா்.
இதைத் தொடா்ந்து அவா் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பழனிதேவியிடம் தாக்கல் செய்தாா்.