பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 67 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 325 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், தோப்புபாளையம், பொன்முடி, பெருந்துறை வடக்குப் பள்ளி, காசிபில்லாம்பாளையம், பெரியவேட்டுவபாளையம், சீனாபுரம், காஞ்சிக்கோவில், ஆயிகவுண்டன்பாளையம், கள்ளியம்புதூா், ஊத்துக்குளி உள்பட 67 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இங்கு வாக்குப் பதிவின்போது கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.