கடம்பூா் மலைக் கிராமங்களில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கடம்பூா் மலைப் பகுதியில் பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குன்றி, அருகியம், மாக்கம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் காட்டுப் பாதை வழியாக சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, பெரும்பாலான மலைப் பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் தாா் சாலையாக மாற்றப்படும், பழங்குடியின மாணவா்கள் பள்ளி செல்வதற்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தாா்.