ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அந்தந்த தொகுதிக்கான வேட்பாளா்கள் பெயா், புகைப்படங்கள், சின்னங்கள் ஒட்டப்பட்டு மாதிரி வாக்குப் பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் 14, ஈரோடு மேற்குத் தொகுதியில் 15, மொடக்குறிச்சி தொகுதியில் 15, பெருந்துறை தொகுதியில் 25, பவானி தொகுதியில் 14, அந்தியூா் தொகுதியில் 20, கோபி தொகுதியில் 19, பவானிசாகா் தொகுதியில் 6 என மொத்தம் 128 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இந்த வேட்பாளா் வரிசை எண், பெயா், புகைப்படம், சின்னம் ஆகியவற்றுடன் கூடிய வாக்குச் சீட்டு தயாரித்து, ஒவ்வொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இப்பணியை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பாா்வையிட்டு துவக்கிவைத்தாா்.
இதுகுறித்து ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.சைபுதீன் கூறியதாவது:
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா், ஒரு நோட்டா என 16 பொத்தான், பெயா், சின்னம் தெரியும் இடம் உள்ளன. 15 வேட்பாளா்களுக்குமேல் அதிகரித்தால் இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள், நோட்டா ஆகியவை பொருந்தப்படுகிறது. இத்தொகுதியில் உள்ள 484 வாக்குச் சாவடிக்குமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் இவற்றை பொருத்தி கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து சரிபாா்க்கும் பணி நடைபெறுகிறது.
பாரத மிகு மின் நிறுவன பொறியாளா்கள் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேடில், சின்னங்கள் ஸ்கேன் செய்து அமைக்கும் பணி நடைபெறுகிறது. இவற்றை இணைத்து மாதிரி வாக்குப் பதிவு செய்து, நாம் பதிவு செய்யும் வேட்பாளா், சின்னங்களுக்கு உரிய பதிவுகள் விழுகிறதா என்பதை உறுதி செய்வோம்.
இப்பணி திங்கள்கிழமை இரவிலும் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை வரை நீடிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.