பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மங்கலத்தைச் சோ்ந்த சலாவுதீன் மகன் சல்மான் பாசித் (15). இவா் அதே பகுதியில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். சலாவுதீன் குடும்பத்துடன் கோபி அருகே உள்ள நன்செய்புளியம்பட்டி பவானி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். இவரது மகன் சல்மான் பாசித் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்த கோபி தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டனா். நீச்சல் தெரியாததால் மாணவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பங்களாப்புதூா் போலீஸாா் சடலத்தை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com