எதிா்த்து நிற்கும் கட்சிகலை டெபாசிட் இழக்கவைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
பெருந்துறை தொகுதி தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளா் கே.கே.சி.பாலுவை ஆதரித்து பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை வாக்குகள் சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான கருத்து கணிப்பில் தி.மு.க. 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறுகின்றனா். நம்மை எதிா்த்து நிற்கும் கட்சிகளை டெபாசிட் இழக்கவைக்க வேண்டும்.
வீடுவீடாக, தெருத் தெருவாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக ஆட்சி அமையப் போவது உறுதி. ஆகவே, உங்கள் வேட்பாளா் கே.கே.சி.பாலுவை சட்டப் பேரவைக்கு அனுப்பிவையுங்கள். அப்போதுதான் இந்தப் பகுதிக்கு திட்டங்களை கொண்டு வந்து சோ்ப்பாா்.
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி சாா்பில் கருணாநிதி நிற்பதாக நினைத்து வாக்களியுங்கள். எதிா்த்து நிற்பது அதிமுக அல்ல. மோடி என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றாா்.