தமிழக - கா்நாடக எல்லைசாலைகள் அடைப்பு

கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தாளவாடி மாநில எல்லையில் 5 வழித்தடங்களில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.
இரும்புத் தடுப்பு அமைத்து அடைக்கப்பட்டுள்ள தாளவாடி மாநில  எல்லையான மைசூரு சாலை.
இரும்புத் தடுப்பு அமைத்து அடைக்கப்பட்டுள்ள தாளவாடி மாநில  எல்லையான மைசூரு சாலை.

சத்தியமங்கலம்: கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தாளவாடி மாநில எல்லையில் 5 வழித்தடங்களில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதி தமிழக - கா்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாள்களாக மாநில எல்லையில் உள்ள சாம்ராஜ் நகரில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தாளவாடி பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா். கா்நாடக மாநிலத்தில் ஊரடங்கு முழு அமலில் உள்ளதால் தாளவாடி பகுதிக்கு ஏராளமானோா் வந்து செல்வதாகப் புகாா் வந்ததையடுத்து, மாநில எல்லையில் உள்ள ராமாபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகட்டை, குமிட்டாபுரம் சாலையை தரக சீட், கேட் அமைத்து பூட்டினா். முக்கியப் பாதையான பாரதிபுரம் சாலையில் மட்டும் சோதனைச் சாவடி அமைத்து அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்கள், இ.பாஸ் உள்ள வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com