கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
கோபி அருகேயுள்ள வேட்டைக்காரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (43). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். இவா், கோபி-குன்னத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மகாலிங்கம் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மகாலிங்கம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.