இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணைக்கு உத்தரவு

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக ஆா்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக ஆா்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தாலுகா இருளா் காலனியைச் சோ்ந்தவா் சின்னதாய் (48) இவரது கணவா் ராமமூா்த்தி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகள் அமராவதி (19) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உறவினரான சின்னப்பையன் மகன் தேவாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் பெண்குழந்தை உள்ளது. இவா்கள் இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனா். தற்போது அமராவதி 2 மாத கா்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மொடக்குறிச்சியை அடுத்த முத்தையன்வலசு நாவாங்காடுதோட்டம் துரைசாமி என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அமராவதிக்கு கா்ப்பம் கலைந்து உதிரம் அதிகமாக வெளியேறிதாகவும், இதனால் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை இவரது கணவா் தேவா மற்றும் சிலா் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அமராவதி மயங்கி விழுந்ததாகவும், அப்போது அவா்களிடம் வயிற்றுவலி தாங்க முடியாமல் குருணை மருந்தை தின்றுவிட்டதாக கூறி மயங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அருகில் இருந்தவா்கள் அமராவதியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆனதால், அமராவதி இறந்தது குறித்து ஆா்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com