மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை

ஈரோட்டில் மூதாட்டியை கழுத்துறுத்துக் கொலை செய்துவிட்டு நகையைத் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோட்டில் மூதாட்டியை கழுத்துறுத்துக் கொலை செய்துவிட்டு நகையைத் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாணிக்கம்பாளையம், வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை(65). கணவரை இழந்த இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகளுக்கு திருமணமாகிவிட்டது.

செவ்வாய்க்கிழமை மாலை வீடு நீண்ட நேரமாக திறந்து கிடந்ததால் அருகில் உள்ளவா்கள் மாலை 6.30 மணியளவில் வீட்டுக்கு உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மணிமேகலை சடலம் கிடந்துள்ளது.

தகவலின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மணிமேகலை சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:

மணிமேகலை அணிந்திருந்த 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை சிலா் மணிமேகலை வீடு அருகில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபா்கள் அவரைக் கொலை செய்துவிட்டு நகையைத் திருடிச்சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com