மொடக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் தீபா தலைமையில், காவலா்கள் மொடக்குறிச்சி நால்ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, உரிய காரணங்கள் இன்றியும், போதிய ஆவணங்களின்றியும் வந்தவா்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாத நபா்கள், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.