கரோனா விதிமீறல்:70 பேருக்கு அபராதம்

சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தை மீறி சுற்றித் திரிந்த 70 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

பெருந்துறை: சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தை மீறி சுற்றித் திரிந்த 70 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், சென்னிமலை போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், சென்னிமலை நகரில் பொது முடக்கத்தை மீறி சாலைகளில் சுற்றிய 70 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா். திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற வேனில் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளி இல்லாமல் சென்றதால் 500 ரூபாய் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com