அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு
By DIN | Published On : 26th May 2021 06:21 AM | Last Updated : 26th May 2021 06:21 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன்.
கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கோபி கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபி அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதி இங்கு இல்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ. செங்கோட்டையன் உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்கு அரசு தலைமை மருத்துவரை சந்தித்து பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வதாகக் கூறினாா். அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளை சந்தித்து தேவையான மருத்துவ வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினாா்.