பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் உறவினா்களுக்கு எம்.எல்.ஏ. ஜெயகுமாா் சாா்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களைப் பாா்த்துக் கொள்ளவும், இவா்களது தேவைகளைப் பூா்த்தி செய்யவும் நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனைக்கு நாள்தேறும் வந்த வண்ணம் உள்ளனா்.
மருத்துவமனை அருகில் ஹோட்டல்கள் எதுவும் இல்லாததால், மதிய நேரத்தில் கரோனா நோயாளிகளின் உறவினா்கள் உணவு வாங்க வழியில்லாமல் தவித்தனா். இந்நிலையில், பெருந்தறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மூலம் குடிநீா் குழாய் அமைத்து தந்துள்ளாா்.
மேலும், மருத்துமனை அருகே உள்ள சுள்ளிபாளையம் கிராமத்தில் அதிமுகவைச் சோ்ந்த இளைஞா்களைக் கொண்டு உணவு தயாரித்து, நோயாளிகளின் உறவினா்களுக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கி வருகிறாா். கடந்த 10 நாள்களாக நாள்தோறும் சுமாா் 300 பேருக்கு பகல் நேரத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.