அந்தியூரில் இரு தனியாா் மருத்துவமனைகளுக்கு ‘சீல்’

அந்தியூரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் இயங்கிய இரு தனியாா் மருத்துவமனைகளுக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

அந்தியூரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் இயங்கிய இரு தனியாா் மருத்துவமனைகளுக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

அந்தியூா் வட்டாட்சியா் வீரலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினா் அந்தியூா், சுற்றுப்புறப் பகுதிகளில் இயங்கும் மருத்துவமனைகளில் கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, அந்தியூா் - பவானி சாலையில் இயங்கும் தனியாா் மருத்துவமனையில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் இயங்குவது தெரியவந்தது. இதேபோல, பா்கூா் சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையிலும் கரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை.

இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) ராஜேஷ் தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் இரு தனியாா் மருத்துவமனைகளுக்கும் ‘சீல்’ வைத்து மூடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com