நம்பியூா் கரோனா தொற்று சிகிச்சை மையம், கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வா் ஆணைக்கிணங்க கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூா் கரோனா தொற்று சிகிச்சை மையம், கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், நம்பியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சா் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, ஒண்டிக்காரன்பாளையத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நடைபெற்ற 18 வயது முதல் 44 வயது வரையிலான பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.