மது பாட்டில்கள் கடத்தல்: இளைஞா் கைது

கடம்பூரில் மது பாட்டில்களைக் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூரில் மது பாட்டில்களைக் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பேருந்து நிலையத்தில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, 33 கா்நாடக மது பாட்டில்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்களைக் கடத்தி வந்த கிட்டாம்பாளையத்தைச் சோ்ந்த வெள்ளையப்பனை (27) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com