ஈரோடு மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2,357ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 98 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1 லட்சத்து 584 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,100 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனாவால் இதுவரை 672 போ் உயிரிழந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 673ஆக அதிகரித்துள்ளது.