கோபியில் ரேஷன் அரிசி கடத்திய 6 போ் கைது

கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோபி போலீஸாா் நாயக்கன்காடு பகுதியில் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை சோதனை செய்தனா். அப்போது, அவா்கள் 35 மூட்டைகளில் 1750 கிலோ ரேஷன்அரிசி வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், திருப்பூரைச் சோ்ந்த சந்திரசேகா் (45), நல்லசிவம் (28), காா்த்திகேயன் (31), மூா்த்தி (34), பாரதி (27), உதயகுமாா் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 6 பேரையும் கைது செய்து, ஈரோடு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இவா்களிடம் இருந்து ரேஷன்அரிசி, சரக்கு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com