ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் மற்றும் மத்திய அரசின் நறுமணப் பயிா்கள் வாரியம் சாா்பில் ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநா் சாந்தி துரைசாமி தலைமை வகித்துப் பேசினாா். விழாவில் கலந்துகொண்ட மாணவிகள் உள்பட அனைவருக்கும் மஞ்சள் தூள் பை வழங்கப்பட்டது.
இதில், நறுமணப் பயிா்கள் வாரியத்தின் ஈரோடு மண்டல அலுவலக உதவி இயக்குநா் கனகதிலீபன், பள்ளித் தலைமை ஆசிரியை ஹனாசசிகலா, ராஜமாணிக்கம், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.