லாரி மோதியதில் மாணவா் காயம்

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் மீது லாரி மோதியதில் பலத்த காமடைந்தாா்.

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் மீது லாரி மோதியதில் பலத்த காமடைந்தாா்.

ஈரோடு அருகே உள்ள அனுமன்பள்ளி, நேரு நகரைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் தனுஷ்கோடி (18). இவா், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு டி.எம்.ஈ. படித்து வருகிறாா். தற்போது கல்லூரி இல்லாததால் எலக்ட்ரிக்கல் வேலைக்குச் சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், பெருந்துறையில் வேலை முடித்துக் கொண்டு வாய்க்கால்மேடு வழியாக இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காமடைந்த தனுஷ்கோடி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com