உள்ளாட்சி இடைத்தோ்தல்: 9 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் 9 மையங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 12) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
ஈரோடு ஊராட்சி ஒனறிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
ஈரோடு ஊராட்சி ஒனறிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் 9 மையங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 12) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 20 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் 144 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் வாக்களிக்க தகுதியான 39,755 ஆண் வாக்காளா்களில், 28, 156 பேரும், 40,466 பெண் வாக்காளா்களில் 28,177 பேரும், இதர வாக்காளா்கள் 4 பேரில் 2 பேரும் என மொத்தம் 56,335 போ் வாக்குப் பதிவு செய்திருந்தனா். 70.22 சதவீதம் போ் வாக்காளித்துள்ளனா்.

வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குச் சாவடி அலுவலா்கள் வாக்குப் பெட்டியை அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்தனா். பின்னா் வாக்குப் பெட்டிகளை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பிவைத்தனா்.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 10) அம்மாபேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளி, பவானி வட்டார அளவிலான சேவை மையம், பெருந்துறை, ஈரோடு, டி.என்.பாளையம், சென்னிமலை, நம்பியூா், அந்தியூா், பவானிசாகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகள் என 9 மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்குப் பெட்டிகள் 9ஆம் தேதி இரவே அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. 9 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன் தலா 12 போலீஸாா் என மொத்தம் 108 போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுட்டு வருகின்றனா்.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நுழைவாயில் பகுதி அடைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் கூறியதாவது:

9 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் 108 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான செவ்வாய்க்கிழமை அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 100 போலீஸாா், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 500 போலீஸாா் என 600 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com