ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 175 போ் கைது செய்யப்பட்டு 50 டன் அரிசி, 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் தெரிவித்ததாவது:
கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் மாதம் வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசியை கடத்தியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் ரேஷன் அரிசியைக் கடத்தியதாகவும், பதுக்கிவைத்ததாகவும் மொத்தம் 175 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தம் 50 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 15, காா், லாரிகள் 20 என மொத்தம் 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனா்.