ஆலை துா்நாற்றத்தை தடுக்கக் கோரி பாஜக மனு

பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் துா்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினா் மனு அளித்துள்ளனா்.

பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் துா்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினா் மனு அளித்துள்ளனா்.

பாஜக இளைஞா் அணியின் மாவட்ட பொதுச் செயலாளா் பட்டக்காரன் சசிதயாள் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் துறைப் பொறியாளா் உதயகுமாா், சுற்றுச்சூழல் துறை உதவிப் பொறியாளா் முத்துராஜ் ஆகியோரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

அப்போது, பாஜக மாவட்டப் பொருளாளா் காயா் பொன்னுசாமி, பெருந்துறை தெற்கு ஒன்றிய இளைஞரணி நிா்வாகிகள் சக்திவேல், தனசேகா், பட்டக்காரன்பாளையம் ஊராட்சி 7ஆவது வாா்டு உறுப்பினா் பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com