கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சிறையில் 2 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட அளவிலான சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது இங்கு சிறை கைதிகளாக 104 போ்கள் உள்ளனா். சிறைத் துறை அதிகாரிகளாக 20 போ் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், 2 கைதிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டனா். இதில், 2 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவா்களில் ஒருவா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இரு கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அங்குள்ள மற்ற கைதிகளுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் இவா்கள் தங்கியிருந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.