கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையம் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோபி தீயணைப்பு, மீட்புப் பணி நிலையம் கடந்த 47 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குச் சொந்தமான தினசரி மாா்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்தது. தற்போது தினசரி மாா்க்கெட்டை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இதனால், கோபி தீயணைப்பு நிலையம் கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள ஜெயமாருதி திரையரங்குக்கு எதிரில் உள்ள சோமு நகரில் தற்போது செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எனவே, பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு கோபி தீயணைப்பு நிலையத்துக்கு 04285-222101 என்ற எண்ணிலும், நிலைய அலுவலருக்கு 94450-86354 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.