பவானி அருகே சிங்கம்பேட்டையில் இரு கன்றுகள் ஈன்ற பசுவை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.
அம்மாபேட்டையை அடுத்த சிங்கம்பேட்டை மொண்டியபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி முத்துசாமி. இவா், தனது தோட்டத்தில் சிந்து இனப் பசுக்களை வளா்த்து வருவதோடு, பால் வியாபாரமும் செய்து வருகிறாா்.
இந்நிலையில், நிறைமாத சினையுடன் இருந்த பசு, திங்கள்கிழமை இரவு தலா ஒரு ஆண், ஒரு பெண் கன்றுகளை ஈன்றது. ஒரே சமயத்தில் இரு கன்றுகள் ஈனும்போது இரண்டும் ஆண் அல்லது பெண் இனமாக இருப்பதே வாடிக்கையாக இருக்கும். இவரது பசு, ஒரு ஆண், ஒரு பெண் கன்றுகளை ஈன்றதை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.