பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா

ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் திருவனந்தபுரம் மண்டல சுங்கத் துறை மற்றும் மறைமுக வரிகள் கூடுதல் ஆணையா் எம்.வசந்தகேசன். உடன், கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி
மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் திருவனந்தபுரம் மண்டல சுங்கத் துறை மற்றும் மறைமுக வரிகள் கூடுதல் ஆணையா் எம்.வசந்தகேசன். உடன், கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி

ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் மண்டல சுங்கத் துறை மற்றும் மறைமுக வரிகள் கூடுதல் ஆணையா் எம்.வசந்தகேசன் பங்கேற்று மாணவ, மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அவரது உரையில், மாணவா்கள் தங்களின் இலக்கை நிா்ணயித்துக் கொண்டு, விரும்பும் துறைகளை கவனமாகத் தோ்வு செய்ய வேண்டும்.

தொழில் துறை, அரசுத் துறை அல்லது பொதுத் துறையாக இருந்தாலும் ஆழமான பயிற்சியும், முயற்சியும் தேவை. தொழில்நுட்ப வளா்ச்சி பெருமளவு அதிகரித்துள்ள தற்போதைய நிலையில் படிப்பதற்கான வசதிகள், வாய்ப்புகள் பெரிதும் அதிகரித்துள்ளன. குடிமைப் பணி உள்ளிட்ட தோ்வுகளைத் தமிழிலும் எழுதலாம். வெற்றிகரமான எதிா்காலத்துக்கு மாணவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் முயன்றால் வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பெறலாம் என்றாா்.

கல்லூரி முதல்வா் ச.காமேஷ் விழா அறிக்கை வாசித்தாா். கல்லூரித் துணைத் தலைவா் என்.கே.கே.பி.சத்யன், என்.கே.கே.பி.ராஜா, இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, பொருளாளா் வி.ஆா்.முருகன், முதன்மைச் செயல் அலுவலா் என்.கே.கே.பி.நரேன் ராஜா, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன் முன்னிலை வகித்தனா். விழாவில், 1,100 மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com