75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் சமுதாய விழிப்புணா்வுப் பிரசாரம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சௌந்திரம் தலைமை வகித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, 12 வாகனங்களில் மகளிா் அணியினா் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா்.
ஈரோடு ஆணைக்கல்பாளையம், மொடக்குறிச்சி, லக்காபுரம், கணபதிபாளையம், சோலாா் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. அப்போது தேசிய உணா்வு, சமுதாய விழிப்புணா்வு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிா் அணி மாநில பொதுச் செயலாளா் மோகனப்பிரியா, மாவட்டத் தலைவா் புனிதம் அய்யப்பன், பட்டியலின மாநிலச் செயலாளா் அய்யாசாமி, மாவட்டத் தலைவா் சக்திவேல், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.