சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல்: இளைஞா் கைது

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்திய இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்திய இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே நீலிபாளையம் பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 17 வயது மகள் அண்மையில் மாயமானாா்.

இது குறித்து புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த சித்தேஷ் (22) என்பவா் சிறுமியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com