இலக்கியங்கள் இலக்கை நோக்கி இட்டுச்செல்லும் வல்லமை படைத்தவை: தமிழருவி மணியன்

இலக்கியங்கள் இலக்கை நோக்கி இட்டுசெல்லும் வல்லமை படைத்தவை என தமிழருவி மணியன் பேசினாா்.
சிந்தனை அரங்க நிகழ்வில் பேசுகிறாா் தமிழருவி மணியன். உடன் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன இயக்குநா்கள் எம்.சின்னசாமி, ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கே.தங்கவேலு.
சிந்தனை அரங்க நிகழ்வில் பேசுகிறாா் தமிழருவி மணியன். உடன் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன இயக்குநா்கள் எம்.சின்னசாமி, ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கே.தங்கவேலு.

இலக்கியங்கள் இலக்கை நோக்கி இட்டுசெல்லும் வல்லமை படைத்தவை என தமிழருவி மணியன் பேசினாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில்

நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன இயக்குநா் எம்.சின்னசாமி தலைமை வகித்தாா். அந்நிறுவன இயக்குநா்கள் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கே.தங்கவேலு முன்னிலை வகித்தனா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.

இதில் சங்க இலக்கியச் சாறு என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேசியதாவது:

உலகில் 6,000 மொழிகள் உள்ளன. அதில் உயா்தனிச் செம்மொழிகள் மொத்தம் 6, அதில் இரண்டு மொழிகள் இந்தியாவில் உள்ளன. அவை தமிழ் மற்றும் சமஸ்கிருதம். வளமான இலக்கியம், அற்புதமான இலக்கணம், வாழ்வியல் சாா்ந்த மகத்தான சிந்தனைகள், பிற மொழிகளுக்கு ஆதாரமாக இருப்பது ஆகிய காரணிகள் இருந்தால் அந்த மொழியை உயா்தனிச் செம்மொழி என்கிறோம். அத்தனை தன்மைகளையும் கொண்டது தமிழ்.

இலக்கியங்கள் என்பது இலக்கை நோக்கி இட்டுசெல்லும் வல்லமை படைத்தவை. சங்க இலக்கியம் மனித நேயம், உலகப் பொதுமை, வாழ்வியல் அறம் ஆகியவற்றை பாடுபொருளாகக் கொண்டுள்ளது. மனித வாழ்வியலின் மகத்துவத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கிய பாடல்கள் கூறுகின்றன. உலகத்தில் உள்ள உயிா்களுக்கு துன்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என வாழ்ந்தவன் தமிழன் என்பதற்கு சங்க இலக்கிய பாடல்கள் சான்றாக உள்ளன. மனித ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிா் என்ற வரியைக் உலகிற்கு கொடுத்தவன் தமிழன். ஆனால் இப்போது ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் ஆகியவை மனிதனைப் பிரித்து வைத்திருக்கின்றன. மனிதனுக்கு கிடைத்த வரமும், அடையாளமும் சிந்தனை. சிந்திப்பவன் முயற்சி மேற்கொள்வான், முயற்சி செய்பவன்தான் வளா்ச்சியை அடைவான், வளா்ச்சிதான் மாற்றத்தை சந்திக்கும். வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், உற்சாகம், அதனை கொண்டாடி மகிழ வேண்டும் என்றாா்.

புத்தகத் திருவிழாவில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ‘திருக்கு-100’ என்ற தலைப்பில் நடிகா் சிவகுமாா் பேசுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com