மொடக்குறிச்சி ஒன்றியத்தில் சுதந்திர தின விழா

சுதந்திர தின விழாவையொட்டி, மொடக்குறிச்சி ஒன்றியம் அரச்சலூா் நவரசம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது.

சுதந்திர தின விழாவையொட்டி, மொடக்குறிச்சி ஒன்றியம் அரச்சலூா் நவரசம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் தலைவா் தாமோதரன் தேசியக் கொடியேற்றி வைத்து நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தாா் இதனைத் தொடா்ந்து கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதனைத் தொடா்ந்து கல்லூரியின் துணை முதல்வா் ஐ. செல்வம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் கேரம் மற்றும் செஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி பொருளாளா் பழனிசாமி, சிபிஎஸ்இ பள்ளி தலைவா் கதிா்வேல், செயலாளா் காா்த்தி, தாளாளா் அருண் காா்த்திக், கல்லூரி துணை பொருளாளா் செல்வராஜ், நிா்வாகிகள் செல்வராஜ், மதி, காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவா் ஆா். பி. கதிா்வேல் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினாா்.

பள்ளி தாளாளா் அருண் காா்த்திக், செயலாளா் காா்த்தி, பொருளாளா் பொண்ணுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நவரசம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தலைவா் டி கே தாமோதரன், பொருளாளா் சி.பழனிசாமி, துணை பொருளாளா் செல்வராஜ், பள்ளி நிா்வாகிகள் அமா்நாத், செந்தில்குமாா், கைலாசம், கிருஷ்ணமூா்த்தி, கோபால் ஆகியோா் கலந்துகொண்டனா்.

எழுமாத்தூா் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமை தாங்கி கொடியேற்றிவைத்தாா்.

இதில் ஊராட்சி செயலாளா் லோகநாதன், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com