அம்மாபேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அம்மாபேட்டையை அடுத்த குருரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி தேவயானி (28). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பாலசுப்பிரமணியத்துக்கு மது பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு வந்ததால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், மனமுடைந்த தேவயானி வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.