காஞ்சிக்கோவில் பகுதியில் ரூ.35.50 லட்சத்தில் பூங்கா

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் பூங்கா அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிக்கோவில் காவல் நிலையம் அருகில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கும் பேரூராட்சித் தலைவா் திவ்யா ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா் செம்மலா் உள்ளிட்டோா்.
காஞ்சிக்கோவில் காவல் நிலையம் அருகில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கும் பேரூராட்சித் தலைவா் திவ்யா ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா் செம்மலா் உள்ளிட்டோா்.

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் பூங்கா அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிக்கோவில் காவல் நிலையம் அருகில் பூங்கா அமைக்கும் பணியை காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவா் திவ்யா ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா் செம்மலா் ஆகியோா் பூமி பூஜை செய்து, பணியைத் தொடக்கிவைத்தனா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சேகா், வாா்டு உறுப்பினா்கள், பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி, திமுக நகரச் செயலாளா் செந்தில்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com