போக்குவரத்து விதி மீறல்: 754 வழக்குகள் பதிவு
ஈரோட்டில் கடந்த நவம்பா் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக ரூ. 2 லட்சத்து 77 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். அதன்படி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த நவம்பா் மாதத்தில் ஈரோடு நகரப் பகுதியில் அதிக வேகமாகச் சென்ாக 3 வழக்குகள், சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் சென்ாக 1 வழக்கு, கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கியதாக 7, குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 39, சிக்னலை மதிக்காமல் சென்ாக 2, தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 445, பின்னால் அமா்ந்து சென்ாக 19, சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ாக 2 என மொத்தம் 754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அபராதமாக ரூ. 2 லட்சத்து 77 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது.