அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வீரதீர செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு 2023ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பதக்கத்தைப் பெற தகுதியான நபா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், பொதுமக்களின் உயிா் மற்றும் சொத்தை காப்பதில் வீரதீர செயல் புரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுடையோா் இணையதள முகவரியில் வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுபெற விரும்பும் தகுதியான நபா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்தபின் கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகம், 6ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com