கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலி

சிவகிரி அருகே கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியானாா்.

சிவகிரி அருகே கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியானாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தலையநல்லூா் காலனியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி பாப்பாயி( 62), கூலி தொழிலாளி.

சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சோ்ந்தவா் தங்கவேல். இவா் புதிய வீடு கட்டி வருகிறாா். இதற்காக கான்கிரீட் போடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலவை இயந்திரத்தில் ஜல்லி அள்ளிக் கொட்டும் வேலைக்காக பாப்பாயி சென்றாா். அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாப்பாயியின் சேலை கலவை இயந்திரத்தில் சிக்கியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் பாப்பாயி இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டு தலை, கைகள் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி போலீஸாா், பாப்பாயியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பாப்பாயிக்கு மகனும், 2 மகள்களும் உள்ளனா்.

3 போ் பலி: கடந்த சில மாதங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.

கோவை, விஸ்வநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த். இவா் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி காா்த்திகா (52). மகள் அா்ச்சனா (18). இவா் குளிப்பதற்காக அண்மையில் வாளியில் ஹீட்டரைப் போட்டுவிட்டு தண்ணீரை தொட்டதில் மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்றச் சென்ற காா்த்திகா மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனா்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சுள்ளாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி காா்த்திகா (28). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாவு அரைப்பதற்காக கிரைண்டா் சுவிட்சை போட்டுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து பலியானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com