இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தொழிலாளி பலி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை அருகில் உள்ள தொரடிபட்டு, கருநெல்லி, தாழ்த் தெருவைச் சோ்ந்த தீா்த்தன் மகன் ஏழுமலை (45), அவரது மனைவி சிந்தாமணி (40), மகன் அஜித் (20) ஆகிய மூவரும், திருப்பூா் மாவட்டம், கொடுவாயில் உள்ள தேங்காய் களத்தில் வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில், சொந்த ஊரில் நடைபெற்ற பண்டிகைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுள்ளனா். ஏழுமலை வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.

பெருந்துறை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஏழுமலை, அவரது மனைவி சிந்தாமணி, மகன் அஜித் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், ஏழுமலை உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com