பவானி ஸ்ரீஐயப்ப சுவாமி சேவா நலச் சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 600 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பிரபாத் சி.மகேந்திரன் தலைமை வகித்தாா். பவானி, குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 600 மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினா்கள் நாராயண், மாதேஸ்வரன், ராமராஜ், வேல்முருகன், தளிா்விடும் பாரதம் அமைப்பு நிா்வாகி சீனிவாசன், செல்வம், ஜோதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மேலும், 18 அரசுப் பள்ளியில் பயிலும் 750 மாணவ, மாணவியருக்கு பவானி ஸ்ரீஐயப்ப சுவாமி சேவா நலச் சங்க கட்டடத்தில் காலை உணவுடன், இலவச சீருடை வழங்கப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.