இருசக்கர வாகன திருட்டு: ஒருவா் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் உப்புகிடங்கு வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). இவரது வீட்டுக்கு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா். இது குறித்து காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜாமுகமது (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com