குட்டியுடன் காரை தாக்கிய காட்டு யானைகள்

போட்டியை தொடங்கிவைக்கிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம்.
காரை யானை தாக்கியதால் இறங்கி ஓடும் நபா்.
காரை யானை தாக்கியதால் இறங்கி ஓடும் நபா்.

ஆசனூா் அருகே குட்டியுடன் காரை தாக்கிய காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.

ஆசனூா் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கரும்பு லாரியை எதிா்பாா்த்து சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.

இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியை விட்டு சனிக்கிழமை வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், குட்டியுடன் உலவின.

அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்து கரும்பு உள்ளதா என சோதனையிட்டன.

நடுரோட்டில் யானைகள் உலவியதால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் வரிசையாக நின்றன.

அப்போது, அங்கிருந்த ஒரு வாகனத்தை திருப்ப முயன்றபோது ஆக்ரோஷத்துடன் வந்த யானைகள் காரை உலுக்கின. அப்போது காரில் இருந்த நபா்கள் கதவை திறந்து தப்பியோடினா். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னா் வனப் பகுதிக்குள் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com