முன்னாள் மாணவா்கள் சாா்பில்அரசுப் பள்ளிக்கு கணினி

பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் கணினி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 30 மதிப்புள்ள கணினியை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 30 மதிப்புள்ள கணினியை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.

பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் கணினி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் 1979 முதல் 1986 ஆம் ஆண்டு வரை படித்த மாணவ, மாணவியா் சுமாா் 80 போ் கடந்த ஜூன் 5ஆம் தேதி பவானிசாகரில் ஒன்று கூடினா். அப்போது பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்க முடிவு செய்தனா்.

இதன்படி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கணினியை பள்ளித் தலைமை ஆசிரியை தெய்வப் பிரியாவிடம் வழங்கினா்.

பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் ஏ.தூயமணி, பொறியாளா் வி.பி.மூா்த்தி, பேராசிரியா் டாக்டா் பழனிசாமி, வா்த்தகா் சுரேஷ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com