அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
வெள்ளிதிருப்பூா், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சின்னசாமி மனைவி காளியம்மாள் (60). இவா், அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம், காளியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த காளியம்மாள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வெள்ளிதிருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.