அம்மாபேட்டை அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பவானியை அடுத்த அம்மாபேட்டை, சொக்கநாதமலையூா் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பெரும்பாலும் கூலி தொழிலாளா்கள் நிறைந்த இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளித்திருப்பூா் - பவானி சாலையில் சொக்கநாதமலையூா் பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து மறியல் போராட்டதில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் விநியோகம் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.